Welcome Friends!!

Hi.This Is Ganesh From MIT Chromepet,Chennai.Iam doing My First year B.E in Automobile.Iam a Great Fan of Writer Sujatha and Occasionally Try My Hand in Writing Thamizh Stories and Haikus.

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Read my blog. What does it suggest?

Friday, March 17, 2006

சில கருத்துகள்......

பன்னிரண்டாம் வகுப்புப் பொத்துத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்க,அதைப் பற்றிப் பல சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்க,கல்வித்துறையைப் பற்றி ஏதாவது எழுதுவோமே என மனம் அறிவுறுத்தியதன் பலனாய்......
முதலில் பள்ளிக் கல்வியைப் பற்றி அலசுவோம்…..
என் பள்ளி வாழ்க்கையில் கவனித்த ஒரு விஷயம் Partialism.இந்த Partialism இல்லாத பள்ளிகளே இல்லை எனக் கூறலாம். ஏதாவது ஒரு பள்ளியில் படிக்கும், ஒரு சுமரான மார்க் வாங்கும் மாணவனை கேட்டுப் பாருங்கள்…. அவன் வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் மீது எல்லா ஆசிரியர்களும் பாசத்தை பொழியும் விஷயத்தை (மிகவும் emotional ஆக) விளக்குவான் (என்னிடம் ஒரு வருடத்திற்கு முன் கேட்டிருந்தால் நானும் சொல்லியிருப்பேன்!). தான் நடத்தும் பாடங்களை அக்கறையாக கவனித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் மீது தனி கரிசனம் காட்டும் ஆசிரியர்கள் ஒரு வகையில் தவறிழைக்கவில்லை என மனம் வாதாடினாலும்,பல வகையில் தவறு இழைக்கிறார்கள் என மூளை குற்றம் சாட்டுகிறது.அதன் வாதத்தை கேட்போம்....
படிக்கும் மாணவனை ஊக்குவித்துக்கொண்டே இருப்பதால்,படிக்காதவர்கள், "தங்களுக்கு இனி படிப்பே வராது" என முடிவுக்கு வந்து விட நேர்கிறது.தன்னைப்போல சிந்தனை உள்ளவர்கள் ( நிறைய பேர் இருப்பார்கள்) சிலரை கூடிக்கொண்டு கும்பல் சேர்க்கத்தொடங்குவார்கள்.ஒரு Gang form ஆகிறது. பெண்களை சைட் அடிப்பது , அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது , சில கை கலப்புகள்…. என இந்த குழு மெல்ல ‘தழைத்தோங்கத்’ தொடங்கும் . பிற்காலங்களில் அவர்களும் உருப்பட மாட்டார்கள்,அவர்களை சுற்றி இருப்பவர்களையும் உருப்பட விட மட்டார்கள் (இல்லன்னா அரசியல்ல குதிச்சுடுவாங்க..அதுதானே சொல்ல வர்றீங்க?) .இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ...என இழுக்க விரும்பவில்லை. நாம் பொது இடங்களில் சந்திக்கும் சில கும்பல்கள் (“பாத்தாலே பத்திண்டு வர்றது” என உங்கள் Girl Friendஓ உடன்பிறந்தவளோ கூறுவாளே... ) இத்தகைய Partialisஅப்பேயினால் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கக்கூடும். அந்த நன்றாய் படித்த மாணவர்கள் States இலோ London இலோ AC அறையில் Computerஐ தட்டிக் கொண்டிருக்க ,சம்பந்தப்பட்ட ஆசிரியை Tuition சொல்லித் தந்து கொண்டே "செல்வி" பார்துக்கொண்டிருக்க , இரு தரப்புக்கும் தெரியாது தங்களால் ஒரு தேச விரோத சக்தி உருவாகிக்கொண்டிருக்கிறது என ! ‘அந்நியன்’ படத்தில் நம்ம தல சுஜாதா வசனத்திற்கு குரல் கொடுக்கும் விக்ரம் கூறுவதைப் போல் தப்பு Small ஆய் இருப்பினும் விளைவு XL ஆய் மாறிவிட்டது பார்த்தீர்களா?. மனது குறுக்கிட்டு "ஆயினும் இந்த Partialisஅத்தினால் பலர் பாதிக்கப்படுவதில்லையே! சில படிப்ஸுகளை (கல்லூரியில் கற்றுக்கொண்ட வார்த்தை) தூக்கி கொஞ்சும் ஆசிரியர்கள் சிலரை ரொம்ப ரொம்ப இடித்துரைப்பர். அத்தகைய மாணவரே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்."எனக் கூறுகிறது. தீர்ப்பை தள்ளிப்போட்டுவிட்டு (ஹை கோர்டின் சில சூட்சுமங்களை நாமும் கொஞ்சம் பயன் படுத்த வேண்டாமா?)
பள்ளிக் கல்வியின் தரத்தைப் பற்றி பார்ப்போம்....
Einstein சொன்னார்
“The True Purpose of Education is to Train the Mind to Think .
Facts and Data can be Looked up in the text Books.”

எத்தனை அர்த்தமுள்ள சொற்கள்!! ஆனால் நம் கல்வி முறையோ இதற்கு ஏறுமாறாக இருக்கிறது ! LKG இலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை மூளைக்கு நம் கல்வித்துறை பெரிய பாரத்தை தந்ததாகத் தெரியவில்லை. எல்லா பாடங்களுக்கும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு,ஒவ்வொரு Chapterஇன் முதுகிலும் கேள்வி வங்கி ஒட்டப்பட்டிருக்க மாணவரின் வேலை புத்தகத்தின் சொற்கள் அனைத்தையும் மூளையில் ஏற்றிக்கொள்வதே! இதை சிலர் எளிதாக செய்கின்றனர்,சிலர் கடினப்பட்டு செய்கின்றனர்,சிலர் செய்வதில்லை.இதன் மூன்றினாலும் ஒரு பயனுமில்லை.மூன்று தரப்பினரும் புத்தியை தீட்டி எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இருக்கிறார்கள்...ஆசிரியரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் மாணவரும் நம் மனதைத் தேற்ற இருக்கிறார்கள்.ஆயினும் அவர்களின் எண்ணிகை ஐந்தோ ஆறோ சதவிகிதத்தைக் கூடத் தொடாது. பன்னிரெண்டாம் வகுப்பு வந்ததும் அதுவரை பத்தி பத்தியாக மனப்பாடம் செய்வதற்கே பயன்படுத்தி வந்த மூளையை திடீரென "யோசி....யோசி.." என சீத்தலை சாத்தனார் range இற்கு குடைந்தால் எப்படி.Entrace Exams ஐப்பற்றிக் கூறுகிறேன்.
என்னைப் பொறுத்த மட்டில் நுழைவுத்தேர்வுகள் மாணவர் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாத பேச்சினால் அனைவரும் இந்த அப்பாவி நுழைவுத்தேர்வின் மீது அர்த்தமற்ற கோவம் கொண்டுள்ளார்கள். ஒன்றை கவனித்தீர்களா? இது சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தை அடையும் போதெல்லாம் வெற்றி இதன் பக்கமே இருக்கும்.ஏனெனில் எல்லோரையும் போல் நீதிமன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிடுவதில்லை.
சரி இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நுழைவுத்தேர்வின் அமைப்பை கவனிப்போம் ! நுழைவுத்தேர்வு வினாக்கள் வேற்று உலகத்திலிருந்து திரட்டப்படுவதில்லை. மாணவர் ஒரு வருடமாக திகட்ட திகட்டப் படித்த அதே பாடங்களிலிருந்து தான்.இதற்கு ஒரு சின்ன விளக்கம் தருகிறேன்.....
ஒரு ஐந்தாறு வயது சிறுவனுக்கு மணி பார்க்கக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறோம்.முதலில் Basicஆக சில விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறோம் (இப்ப 'ரெண்டு' பக்கத்தில பெரிய முள் இருந்துதுன்னா ரெண்டு இன்டு அஞ்சு = பத்து.....).பிறகு நாமே ஒரு timingஐ கடிகாரத்தில் அமைத்துவிட்டு எப்படி மணியை சரியாய் கணிப்பது என சில சான்றுகள் மூலம் விளக்குகிறோம். இப்போது அந்த குழந்தை நாம் கற்றுத்தந்ததை சரியாய் கற்றுக்கொண்டுள்ளதா என்பதை அறிய நீங்கள் ஒரு தேர்வு வைக்கிறீர்கள்.ஏற்கெனவே அமைத்த மணியை திருப்பிக் காண்பித்தால் அது பொதுத் தேர்வு (சத்தியமாய் இதை நீங்கள் செய்ய மாட்டீர்கள்). இதுவரை அந்த சிறுவன் கண்டிராத வேறு ஒரு timingஐ காட்டி மணியை கணிக்கச் சொன்னால் அது நுழைவுத்தேர்வு.இவ்வளவே!
இதற்குத்தான் இவ்வளவு வழக்குகள்,கூச்சல் குழப்பம் எல்லாம்! நுழைவுத்தேர்வு வினாக்கள் கடினமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. ஏன் கடினமாக உள்ளது என யோசித்து பார்த்தால், பிழை நம் பக்கமிருப்பதை உணரலாம். சிறு வயதிலேயே மாணவர்களுக்கு radicalஆக யோசிக்க கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். இப்போது ஒரு தேர்வு அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டு காண்பிக்கிறதென்றால் அந்த தேர்வை இரத்து செய்வது என்பது முட்டள்தனம். அரசிற்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்மையாகவே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அவர்கள் கல்வித்தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் எளிமையாகவும் தீர்கமாகவும் உணரும் வகையில் சொல்லித்தரும் ஆசிரியர்களை அமர்த்த வேன்டும். இன்றைக்கு அவர்கள் இந்த தேர்வை நிறுத்தி விடலாம். நான்கு வருடத்திற்குப் பின் மாணவர்களை Recruit செய்ய வரும் கம்பெனிகள் கேட்கும் கேள்விகள் நுழைவுத்தேர்வை விட கடினமானவை. சட்டென சிந்தித்து ஒரு Problemஇற்கு விடை காண வேன்டும்.அத்தகைய பரீட்சைகளுக்கு நுழைவுத்தேர்வு ஒரு முன்னோடியாக அமையும்.(கம்பெனிகளிடம் "நீங்கள் எளிதாகத்தான் கேள்விகளை அமைக்க வேன்டும் என இதே அரசியல்வாதிகள் வாதடுவார்களா?). ஏன் நான்கு வருடங்கள் தள்ளிப் போக வேண்டும்? கல்லூரி முதல் வருடத்திலேயே என்னைப்போன்ற மாணவர்களை இம்சிக்க Engg-Drawing , Engg-Mechanics ஆகியவை காத்துக்கொண்டிருக்கின்றன.ஒரு பிரமிடை நம் பார்வைப் பாதையிலிருந்து முப்பது டிகிரி inclination இல் வைத்து பார்த்தால் அது எப்படித்தோன்றும் என்ற range இற்குத்தான் எல்லா கேள்விகளும் இருக்கும். இவ்வகையான கேள்விகளுக்கு பதிலளிக்க மூளையில்லுள்ள Gyri,Sulci களை உசுப்பேத்திவிட்டு,எல்லா எண்ண அலைகளையும் Polarise செய்தால் தான் விடை எங்கோ புகை மூட்டமாய் இருப்பது போலத்தெரியும். நானும் அவதிப்பட்டிருக்கிறேன்.(எப்படியோ தத்தித் தேவி பாசாகிவிட்டேன் என்பது வேறு விஷயம்!). அதனால் தானே இதைப்பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.( இல்லை என்றாலும் " ரகு சந்தோஷமாய் காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தான் அது தான் அவன் குடிக்கும் கடைசி கப் என்று அறியாமல்..." என்று எதாவது ஒரு கதையை blog செய்து, "வந்து படியுங்கள்" என்று நச்சரித்திருப்பேன் )
இதுவே Entrance போன்ற தேர்வுகளை பள்ளிக் காலங்களிலேயே அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தால், இப்போது மணவர்களை வாய் பிளக்க வைக்கும் தேர்வுகள் வாய் பிளக்க ஆரம்பித்துவிடும்!

Software மட்டுமல்ல Automobile,Electronics,Nanotechnology என பல துறைகளும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அரசு நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளை எட்டாம் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும்.அதை நிறுத்துவதைப் பற்றிப் பேசக்கூடாது! இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்கத் தொடங்கிவிட்டர்கள் ( சில IIT மற்றும் MBA மாணவர்கள் சேர்ந்து Lok Paritran என்னும் கட்சியை தொடங்கியிருக்கின்றனர் ).Scenario மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வளவு நேரம் கவனம் பிசகாமல் பொறுமையுடன் படித்த உங்களுக்கு நன்றி ! Da Vinci இன் One Liner உடன் உங்கள் கண்களுக்கு விடுதலை தந்துவிடுகிறேன்!
“OPEN THE EYES….. You WRETCHED MORTALS”



Wednesday, February 22, 2006

ஒரு குட்டிக்கதை

அந்த conference hallஇல் இனி ஒரு வஸ்துவுக்கும் இடம் இல்லை.பல நாடுகளிலிருந்து வந்திருந்த தொல்பொருள் ஆய்வாளர்களாலும் விஞ்ஞானிகளாலும் நிரம்பி வழியும் நிலையில் இருந்தது.Zurich இல் நடைபெற்ற அந்த Conferenceஐ உலகமே Live Relayஇல் பார்துக்கொன்டிருந்தது.உட்கார இடம் கிடைக்காத ஒரு நமீபிய தொல் பொருள் ஆய்வாளன் Podium அருகில் நின்று கொண்டது தான் பரிதாபம்.இத்தனை பரபரப்பும் எதற்கு?ஆய்வாளர்கள் பிரித்து எடுத்த - பல்லாயிரம் ஆண்டுகட்களுக்கு முன்னால் மனிதன் பெரிதும் உபயோகப்படுத்திய - ஒரு பொருளை இந்த கருத்தரங்கில் அறிமுகப்படுத்துவதற்குத்தான்.இதன் மூலம் மனிதனின் அன்றைய வாழ்க்கை முறையையும் அவனின் உடலில் இருந்த வேதியியல் பொருட்களையும் கணித்து சில சிக்கலான Evolutionary மாற்றங்களை புரிந்து கொள்ளவும் இக்கண்டுபிடிப்பு நிச்சயம் உதவும் என அவர்கள் நம்பினர்.அந்த கருத்தரங்கு மாளிகையை விவரிக்க வேண்டாமா? அறை முழுவதும் ஆங்காங்கே சுவருக்குள் பொருத்தப்பட்ட X-Ray வசதி கொண்ட DigiCamகள் எல்லா நபர்களையும் ஸ்வாரஸ்யம் குறையாமல் திரும்ப திரும்ப ஆராய்ந்து கொன்டிருந்தது.சுவர்களில் இடத்திற்கேற்ப Reverberation time adjusting வசதி கொண்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.எல்லா விஞ்ஞானிகளுக்கும் Virtual Bullet Proof உடைகள் அணிவிக்கப்பட்டு அவர்கள் ஆஜானுபாகுவாக காபியை உறிஞ்ஜிக் கொன்டிருக்க அறையில் பரவிய திடீர் அமைதி Chief இன் வரவை அறிவித்தது.அவருக்கென அமைக்கப்பட்ட தனி நுழைவாயில் மூலம் Helipad இல் வந்து இறங்கினார்.
அவரைப் பார்த்ததும் 'விர்ர்'ரென அனைவர் உள்ளும் ஒரு விறைப்பு ஊர்ந்து சென்றது .அவருக்கு அத்தகைய உயரிய பதவி வழங்கப்பட்டதற்கான காரணத்தை அவரது உடற்கட்டே விவரித்தது.சிறிது நேரத்தில் ஒரு ஹைடெக் பெட்டி போடியம் நடுவில் கொன்டு வந்து வைக்கப் பட்டு அவசர அவசரமாய் அந்த ஏரியாவிற்கு மட்டும் தனி தட்ப வெட்ப நிலை உருவக்கப் பட்டது.மூன்று நபர்கள் தடிமனான உடைகள் அணிந்து கொண்டு வந்து வியர்வை சிந்த ஒரு கண்ணாடி ஜாரை அந்த ஹைடெக் பெட்டியிலிருந்து எடுத்து Chief இன் முன் வைக்க அந்த மைக்ரோ வினாடி பல நூறு கேமராக்கள் அதனைப் பார்த்து கண்சிமிட்டி பளிச்சிட அதற்கு வெட்கம் வந்திருக்கும்.கண்ணாடி குப்பியிலிருந்த தெளிந்த திரவத்தை Amplifier Screenஇல் பார்த்த எல்லோரும் பிரமிப்பின் பிடியில் சிக்கி விலக சிறிது நேரம் பிடித்தது.சில நிமிடஙள் Chief தன் சகாக்களிடம் ஏதோ கிசு கிசுத்துவிட்டு இறுதியில் எழுந்து போடியம் நடுவிற்கு மிதந்து வந்தார்.ஒரு அரை மில்லி மீட்டர் மைக்கை தன் கோட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு அவர் பேசியது,அந்த அறையில் இருந்த ஐம்பத்து நாலு மைக்ரோ ஸ்பீக்கர்க்ளிலும் - ஜானிற்கு English இலும் சாடெர்ஜிக்கு Hindiஇலும் யாங்சாஙிற்கு Mandarinஇலும் - 'எக்கோ'யித்தது.கருத்தரங்கிற்கு சென்றிருந்த தமிழரசன்,(CAO,South India) காதுகளில் விழுந்த சொற்கள் யாதெனில்... "சகோதரர்களே..இதோ நம் முன் நடனமாடிக்கொண்டிருக்கும் இந்த தெளிந்த திரவத்தை நம் தொல்பொருள் ஆய்வாளர்கள் அன்டார்டிகாவில் தனித்தனி சிதறல்களாய் கண்டெடுத்து CQD தொழில் நுட்பம் வாயிலாக பிரித்தெடுத்து ஒன்றிணைத்து நம் முன் காண்பித்திருக்கிறார்கள்.இப்போதைக்கு கிடைத்த ஆய்வுக் குழுவின் கருதுப்படி இதனை நம் முன்னோர்கள் குடிக்கவும் உடைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தினார்கள் எனத் தெரிகிறது...."அறை சில வினாடிகளுக்கு சிரிப்பலைகளில் சிக்கித் திணறியது."...Hydrogen மற்றும் Oxygen இன் பிரமிக்கத்தக்க பிணைப்பால் இந்த திரவம் உருவாகியிருக்கிறது.இதை நம் முன்னோர்.....", என்று எதிர்பாராமல் நிறுத்தி மறுபடியும் தன் notesகளை சரிபார்த்துக்கொண்டு "ஆங்..இதை நம் முன்னோர்கள் தண்ணீர் என அழைத்தனர்.இக்கண்டுபிடிப்பை பற்றி மேற்கொண்டு ஆரய்வதின் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் !!.இதுவே இந்த மூவாயிரத்து அறனூற்றி எழுபத்து மூன்றாம் ஆண்டின்(3673) சிறந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு எனக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.மேலும்....."

பி.கு: இக்கதை 3700 ஆன்டுகளை சுற்றி சுழல்வதால் பல ஆங்கில பிரயோகங்களை நீங்கள் காணலாம்.கதையின் ஒட்டத்திற்கு இவை இன்றியமையாதவை.தமிழ் ஆர்வலர்கள் இதனை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும்!!

Saturday, February 18, 2006

Hykoo Section:

These are the hykoos I have written.I hope you will like them.I dont know whether any of these had already been written.Please read them carefully .Your valuable comments and advices will be greatfully appreciated!

1. பெய்யும் மழைக்கு
கறுப்புக் குடை வறவேற்பு - குடை
(This Hykoo was published in AV by Writer Sujatha sir as one of the best two hykoos of 2005.)

2. நீன்டு செல்லும்
குப்பை கூளமாய் -
ரயில் தண்டவாளம்

3. எண்ண அலைகளின்
தொடர் இரைச்சல்-
மொளனம்

4. அரை க்ராம் நகத்தை
தானம் கொடுத்து
கவிதை வடிக்கும் -
விரல்

5. நிலத்திற்கு இட்டுச்
சென்றவரை இடுகாட்டிற்கு
இட்டுச் செல்லும் -
மின்சாரம்

6. திறக்கப் பட்ட
ஏட்டின் பறிக்கப்பட்ட
காகித முத்தங்கள்

7. கடற்கரையில் தொடர்ந்து
காணலாம் அலைகளின்
ஓட்டப்பந்தயத்தை

8. பொங்கல் வாழ்த்து
பகிர்ந்து கொள்ளும்-
செல் ஃபோன்கள்

9. சிந்தைகள் எல்லாம்
பின்னே....
சாலையில் முழுக்க
குன்டுக் கற்கள்

10. கனவுத் திரையில்
திடீர் வில்லன் -
விழிப்பு